ADDED : மார் 26, 2024 02:26 AM
ஈரோடு;ஈரோடு பகுதியில் ஏழு பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர், ஏழு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு பகுதியில் நேற்று, மாணிக்கம்பாளையம், வ.உ.சி., பூங்கா, பி.பி.அக்ரஹாரம், சித்தோடு 4 ரோடு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, காரில் வந்த மாதேஸ்வரன் என்பவரிடம், 1 லட்சம் ரூபாய்; மனீஷ் என்பவரிடம், 2.50 லட்சம் ரூபாய்; அருண்குமார் என்பவரிடம், 2.25 லட்சம் ரூபாய்; காமேஷ்குமார், சுரேஷ்குமார், மாதேஷ் ஆகியோரிடம், 81,400 ரூபாய்; தமிழரசன் என்பவரிடம், 53,000 ரூபாய் என, 7 லட்சத்து, 9,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட அளவில் இதுவரை, ஈரோடு கிழக்கில், 43.71 லட்சம் ரூபாய்; ஈரோடு மேற்கில், 44.37 லட்சம் ரூபாய்; மொடக்குறிச்சியில், 5.56 லட்சம் ரூபாய்; பெருந்துறையில், 17.40 லட்சம் ரூபாய்; பவானியில், 7.62 லட்சம் ரூபாய்; அந்தியூரில், 4.20 லட்சம் ரூபாய்; கோபியில், 8.88 லட்சம் ரூபாய்; பவானிசாகரில், 49.06 லட்சம் ரூபாய் என, ஒரு கோடியே, 84 லட்சத்து, 16,740 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை சமர்பித்ததால், 77 லட்சத்து, 95,915 ரூபாயை விடுவித்தனர். தற்போது, 1 கோடியே ஆறு லட்சத்து, 20,825 ரூபாய் கருவூலத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

