தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிற்சாலை கழிவு கொட்டாமல் இருக்க தீர்வு

தொழிற்சாலை கழிவு கொட்டாமல் இருக்க தீர்வு

தொழிற்சாலை கழிவு கொட்டாமல் இருக்க தீர்வு


ADDED : மார் 29, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார் பஞ்.,க்குட்பட்ட தாஜ்நகர் பகுதியில் இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டுவந்து தொழிற்சாலை கழிவுகள் கொட்டி வந்தனர்.

இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிமேல் தொழிற்சாலை கழிவுகள் கொட்டக்கூடாது; மீறி கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டது. நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us