/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்
/
கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED : ஜூலை 18, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் முதல் நாள் தலை ஆடி என சிறப்பானதாகக் கருதப்-படுகிறது. இந்நாளில் புதுமணத்தம்பதியர், நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொடுமுடி காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர்,
வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.