ADDED : ஆக 17, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காளிங்கராயன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில், சித்தோடு சுகாதார ஆய்வாளர்கள் ரகு, லோகநாதன் உள்ளிட்ட குழுவினர் கடை, பேக்கரி, உணவகங்கள் மற்றும் வாகன பழுது பார்க்கும் கடைகளில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
இதில் சுகாதார சீர்கேடாக காணப்பட்ட ஈடுபட்ட இரண்டு கடைகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். தடை செய்யபட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்ததில், மூன்று கடைகளுக்கு தலா, 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.

