sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறுகிய கால பயிர் செய்ய யோசனை

/

குறுகிய கால பயிர் செய்ய யோசனை

குறுகிய கால பயிர் செய்ய யோசனை

குறுகிய கால பயிர் செய்ய யோசனை


ADDED : ஏப் 26, 2024 04:04 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல், குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்ய, வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஈரோடு வேளாண் துணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நவரை நெல் மற்றும் ராபி பருவ பயிர்களின் அறுவடைக்கு பின், நிலங்களை தரிசாக விடாமல் போதிய நீர் பாசன வசதியுடைய இடங்கள், கோடை மழையை பயன்படுத்தி குறுகிய கால மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இதன்படி உளுந்து, எள், நிலக்கடலை பயிர்களை பயிரிடலாம். இவை வறட்சியை தாங்கி வளரும். நீர் பாசன வசதியுடைய இடங்களில் குறைந்தளவு நீரை பயன்படுத்தலாம். சித்திரை மாதத்தில் இரு முறை கோடை உழவு செய்வதன் மூலம், பூச்சி நோய் காரணிகள் மற்றும் களை கட்டுப்படுவதுடன், நிலத்தில் காற்றோட்ட வசதி அதிகரித்து, மண் வளமும் மேம்படும்.

போதிய நீர் வசதியுடைய அனைத்து விவசாயிகளும், நிலங்களை கோடையில் தரிசாக விடாமல், குறுகிய கால மாற்றுப்பயிர்களை பயிரிடுவதால், மண்ணின் வளத்தை காக்கலாம். பயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், மானிய விலையில் இடுபொருட்கள் விபரத்தை, அருகே உள்ள வட்டார, துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us