sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொலையில் கைதான 2 பேர் மீது 'குண்டாஸ்'

/

கொலையில் கைதான 2 பேர் மீது 'குண்டாஸ்'

கொலையில் கைதான 2 பேர் மீது 'குண்டாஸ்'

கொலையில் கைதான 2 பேர் மீது 'குண்டாஸ்'


ADDED : ஜூன் 11, 2024 05:39 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 05:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ஈரோட்டில் வாலிபர் கொலையில் கைதான இருவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஈரோடு, ஈ.வி.என்.சாலை, ஸ்டோனி ப்ரிட்ஜ் பகுதியில் கடந்த மார்ச், 17ம் தேதி அதிகாலை, 38 வயது மதிக்கதக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். கொலையான நபரை இதுவரை அடையாளம் காண முடியவில்லை. அதேசமயம் அவரை கல்லால் தாக்கி நான்கு பேர் கொன்றதை கண்டுடிபிடித்தனர்.

இது தொடர்பாக ஈரோடு, மணல் மேடு, ஆட்டோ டிரைவர் விஜய், 23; ஈரோடு, ஓடைபள்ளம், பெரியார் நகர் மீன் வியாபாரி அருணாசலம், 28, ரஞ்சித், ஏழுமலை என நான்கு பேரை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதில் விஜய், அருணாசலம் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்கு இருப்பது தெரியவந்தது. இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இதை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், இருவரும் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us