ADDED : மே 05, 2024 02:09 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் இன்று 'நீட்' நுழைவு தேர்வு மதியம், 2:00 மணி முதல், 5:20
மணி வரை நடக்க உள்ளது. மதியம், 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள்
மாணவ, மாணவியர் வந்து சேர வேண்டும்.
மாவட்ட அளவில், ஈரோடு திண்டல்
கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகன்டரி ஸ்கூல் - 499 மாணவ, மாணவியர்,
சேனாபதிபாளையம் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் - 1,056,
பழனிகவுண்டன்வலசு லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 288,
கூரப்பாளையம் பிரிவு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி - 864,
கூரப்பாளையம் நந்தா சென்ட்ரல் ஸ்கூல் - 480,
ஒத்தக்குதிரை
ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி ஸ்கூல் - 480,
ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ைஹடெக் இன்ஜினியரிங் கல்லுாரி -
480, துடுப்பதி ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரி - 600
மாணவ, மாணவியர் என, 4,747 பேர் தேர்வில்
பங்கேற்க உள்ளனர்.