/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 16, 2024 01:29 AM
ஈரோடு;பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ல் துவங்கி, 22ல் நிறைவு பெற்றது. ஈரோடு மாவட்டத்தில், 21,800 மாணவ---மாணவியர் எழுதினர். ஈரோடு ஜேசிஸ் மெட்ரிக் பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக், கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி என மூன்று மையங்களில், கடந்த 1ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மையங்களிலேயே பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து சி.இ.ஓ., சம்பத்து கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியுள்ளது. 10ம் வகுப்பு விடைத்தாள் இரு மையங்களில் திருத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும், 27க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

