sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

/

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு


ADDED : ஜூலை 07, 2024 03:02 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில், கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு, கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:

மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத கால்நடைகளை, 1962 என்ற கட்டணம் இல்லாத அழைப்புக்கு அழைத்தால், தேவை அடிப்படையில் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை நேரில் சென்று பார்த்து மருந்து வழங்க வேண்டுமெனில், இந்த அவசர ஊர்தியில் சென்று, சிகிச்சை வழங்கப்படும். நடப்பாண்டு வழங்கப்பட்ட இந்த ஊர்தி மூலமான சிகிச்சை தேவை என இதுவரை, 500 அழைப்பு வந்தது. இதில், 150 அழைப்புகளுக்கு டாக்டர்கள் குழு சென்று, ஆய்வு செய்து மருந்து வழங்கினர். இந்த அவசர ஊர்தியில், கால்நடைகளுக்கு தேவையான அனைத்து வகை மருத்துவ உபகரணங்களும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us