sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது

/

பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது

பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது

பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது


ADDED : ஜூலை 04, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, பெருந்துறை சாலையில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி என்ற, தாய்கோ வங்கி செயல்பட்டு வருகிறது.

வங்கியில் கடன் பெற விண்ணப்பித்த பயனாளி ஒருவரது கணக்கில், 1.50 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

தொகையை பயனாளிக்கு வழங்காமல், கையாடல் நடந்திருப்பதை வங்கி தணிக்கை குழு கண்டறிந்தது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு தணிக்கை குழு தகவல் தெரிவித்தது.

கையாடலில் ஈடுபட்ட, வங்கியின் கடன் அனுமதி பிரிவு பொறுப்பாளராக இருந்த, தற்காலிக பணியாளரான கோவை, ராமநாதபுரம் பாரதி நகர் 5வது வீதியைச் சேர்ந்த பாபுராஜ், 50, என்பவர் மீது நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

தலைமறைவான பாபுராஜை போலீசார் தேடி வந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அவரை, நேற்று ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us