ADDED : ஜூன் 30, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிப்பர் லாரி, நேற்று மாலை, 5:30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.
கோபி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகி விட்டது. கவுந்தப்பாடி போலீசார் விசாரணையில், டிப்பர் லாரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது தெரிந்தது.