ADDED : மார் 26, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்கூரை சேர்ந்தவர் மைக்கேல் பிரபு, 30; ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கி, கடைகளுக்கு பப்ஸ் தயாரித்து சப்ளை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு ஹோண்டா ஆக்டிவா மொபட்டில், திட்டுப்பாறை அருகே சென்றார். எதிரே வந்த பிக்-அப் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

