/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குவாரி வெடி விபத்தில் மேலும் இருவர் கைது
/
குவாரி வெடி விபத்தில் மேலும் இருவர் கைது
ADDED : செப் 01, 2024 03:59 AM
டி.என்.பாளையம்,: டி.என்.பாளையத்தில் விதிமீறி செயல்பட்ட கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களான பெருந்துறை, தாசநாயக்கன்பாளையம் லோகநாதன், 70, அவரின் மனைவி ஈஸ்வரி, 65; மேலாளர் செல்வம், மேட்டூர் பகுதியை சேர்ந்த விஜய், 30, என நான்கு பேரை, பங்களாபுதுார் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குவாரி தொழிலாளர்களான டி.என்.பாளையம், கொளத்துமேடு, உத்தமன் மகன் விவேகானந்தன், 36; கவுண்டம்பாளையம், காமாட்சி நகர் சண்முகம் மகன் பிரபு, 34, ஆகியோரை பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.