ADDED : ஆக 17, 2026 05:59 AM
ஈரோடு:ஊராட்சிக்கோட்டை
குடிநீர் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை உடனடியாக திரும்ப பெற
வேண்டும். சித்தோட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய
குடியிருப்புகளை தகுதியானவர்களுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்ய
வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்திற்கு அதிக வரி வசூல் செய்வதை
நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
இ.கம்யூ. கட்சி சார்பில் ஈரோட்டில் நேற்று நடைபயண பிரசாரம் நடந்தது.
வீரப்பன்சத்திரத்தில் துவங்கி சூளை வழியாக மாணிக்கம்பாளையத்தில்
நிறைவடைந்த ஊர்வலத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
*அனைத்து
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க
வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
பவானியில் ஒன்றிய இ.கம்யூ., செயலாளர் சின்னச்சாமி தலைமையில்
நடைபயணம் மேற்கொண்டனர்.
