ADDED : மார் 09, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் மோதி வாலிபர் பலி
ஈரோடு:பெருந்துறை ரயில்வே ஸ்டேஷன் அருகே, புங்கம்பாடி தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை ஈரோடு ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 25 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்
குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்தது, விசாரணையில் தெரியவந்தது. வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.