sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'

/

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'

'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கடை மாயமாகும்'


ADDED : மார் 24, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கொடியேற்று விழா மற்றும் வணிகர் சங்க பொதுக்கூட்டம், பவானிசாகரில் நடந்தது. வட்டார தலைவர் நாகமையன் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்க கொடியேற்றி வைத்து பேசியதாவது: மே 5ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கவுள்ள வணிகர் சங்க மாநாட்டில் பல லட்சம் வணிகர்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் கடைகள் காணாமல் போக வாய்ப்புள்ளது. பவானிசாகரில் பொதுப்பணித்துறை இடத்தில் கடை நடத்தும் வணிகர்களுக்கு ஆண்டுக்கு, 10 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் வணிகர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல் உள்ளிட்ட பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us