ADDED : டிச 14, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடத்திய ௧ டன் ரேஷன்அரிசி பறிமுதல்
ஈரோடு, டிச. 14-
பவானிசாகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொத்தமங்கலம் பகுதியில், ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆம்னி வேனில், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பவானியை சேர்ந்த ரமேஷ் மகன் தனபால், 26, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக, கடத்தி சென்றது தெரியவந்தது.