/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'
/
'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'
ADDED : பிப் 08, 2025 06:36 AM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்-துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: ஆய்வுக்கூட்டத்தில், கடந்-தாண்டு தேர்ச்சி விகிதம், நடப்பு
கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் முதல் திருப்புதல் தேர்வுகளில் தேர்ச்சி
விகிதம், கடந்தாண்டு பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி விகிதம் தொடர்-பாக, ஆலோசனை நடத்தப்பட்டது.
தினந்தோறும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். பெற்றோருடன் கலந்துரையாடி வீட்-டிலும் கூடுதல்
நேரம் படிக்க அறிவுறுத்தி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை பெற்றுத்தர தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்-பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.