ADDED : மார் 27, 2026 05:01 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும் இது-வரை, 102 வேட்பு மனுக்கள் பெற்று செல்லப்பட்டுள்ளன.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை இலவச-மாக பெற்று செல்லலாம்.
எட்டு தொகுதிக்கும் சேர்த்து இதுவரை, 102 வேட்பு மனு பெற்று செல்லப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் மனு தாக்கல் செய்யலாம்.
அடுத்த இரு நாட்களில் வேட்பு மனுக்கள் பெறுவது அதிக-ரிக்கும்.
விண்ணப்பிக்கும்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் வைப்புத்-தொகையாக, 5,000 ரூபாய்; இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட-வர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். காசோலை, வங்கி வரைவோலை ஏற்கப்ப-டாது.
இவ்வாறு கூறினர்.
* ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலமாக, மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கிருந்து இதுவரை, 30 பேர் வேட்பு-மனு வாங்கி சென்றுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
