ADDED : ஏப் 24, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 4:30 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. மேக மூட்டம், காற்று இல்லாததால் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது.
மதியம், 1:00 மணிக்கு மேல், மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பகல் நேரத்தில், 1.5 முதல், 3.3 டிகிரி வெயில் கூடுதலாக காணப்பட்டது.