ADDED : மே 14, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், நேற்று கடுமையான வெயில் வாட்டியது. காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலும், அவ்வப்போது மேகமூட்டத்துடன் வெப்பமான சூழலும் நிலவியது.
காலை, 11:00 மணிக்கு மேல் வெயிலின் உக்கிரம் அதிகரித்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. நேற்று அதிகபட்சமாக, 104.2 டிகிரி வெயில் வாட்டியது. 2.1 முதல், 4.2 டிகிரி வரை வெயிலின் அளவு கூடி,குறைந்து பதிவானது.
