நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கச்சேரி வீதி அருகில் உள்ள நக்கீரர் வீதியில், சித்தி விநாயகர், பாலமுருகர், புது எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
மறுநாள் காலை கொடியேற்றப்பட்ட நிலையில், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சுவா-மிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். பிறகு, 108 வலம்புரி சங்குகள் வைத்து அபிஷேகம், ஆரா-தனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்ச், 5ம் தேதி இரவு அம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா, மார்ச் 6ல் தீர்த்தம் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

