ADDED : ஜூன் 06, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த
பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கும் பொருட்டு,
'அரசு தொழிற்பயிற்சி நிலையம், காசிபாளையம், சென்னிமலை சாலை, ஈரோடு'
என்ற முகவரியில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை
முகாம் வரும், 10ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க
உள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள்,
முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள்
நிறுவனத்தில் உள்ள தொழில் பழகுனர்கள் காலி இடங்களுக்கு
'அப்ரன்டீஸ்'களை தேர்வு செய்ய உள்ளனர். கூடுதல் தகவலை, 94424 94266,
77084 33777 என்ற எண்ணில் பெறலாம்.
