/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூலி தொழிலாளி வீட்டில்11 பவுன் நகை திருட்டு
/
கூலி தொழிலாளி வீட்டில்11 பவுன் நகை திருட்டு
ADDED : ஏப் 20, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு ரோடு, இந்திரா வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி நட்ராஜ், 50; மகள், தாயுடன் வசிக்கிறார். நேற்று மதியம் வீட்டில் இருந்து வெ ளியே சென்றவர் மாலையில் வீட்டுக்கு வந்தார்.
பீரோவில் வைத்திருந்த, 11 பவுன் நகை, 14 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. நட்ராஜ் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளியை தேடி வருகின்றனர்.

