ADDED : மே 25, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறையை
அடுத்த கராண்டிபாளையத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த
தகவலின்படி, பெருந்துறை போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
கராண்டிபாளையத்தில்
குளத்தில் முட்புதரில் சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே
பகுதியை சேர்ந்த, 38 வயது முதல் 59 வயது வரையிலான ஐந்து பேரை கைது
செய்தனர். அவர்கலிடம் இருந்து, 19 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதேபோல்
கராண்டிபாளையத்தில் தோட்டத்தில் சூதாடிய, 26 வயது முதல் 54 வயது
வரையிலான ஏழு பேரை கைது செய்து,21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
