/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
/
சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
ADDED : செப் 05, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை ஆவணி மாத வளர்பிறை கடைசி திருமண முகூர்த்த நாளான நேற்று, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இதற்காக அதிகாலை, ௪:௦௦ மணி முதலே திருமண ஜோடிகள், உறவினர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். இந்த வகையில் நேற்று, ௧௪ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மக்களால் களை கட்டியது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களும் பரபரப்புடன் இயங்கினர்.