ADDED : டிச 20, 2025 07:13 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக, 157 ஓட்டுச்சாவ-டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுபற்றி கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: புதிதாக வெளியிடப்-பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்காக பெறப்பட்ட படி-வத்தில் கூடுதல் தகவல்கள் பெறப்பட்டது. அதன் அடிப்ப-டையில் தற்போதுள்ள, 16 லட்சத்து, 71,760 வாக்காளர்களில், ஆண்-8,06,914, பெண்-8,64,682, 3ம் பாலினத்தவர்-164 பேர் உள்ளனர். புதிய பட்டியல், https://Voters.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணைய தளத்தில் காட்சிப்படுத்தப்-பட்டுள்ளது.
தற்போதைய புதிய வாக்காளர்களில், மாற்றுத்திறனாளிகள்-11,121 பேர், 18-19 வயதுக்கு உட்பட்டோர்-13,263 பேர், 20-29 வயதுடையோர்-2 லட்சத்து,74,734 பேர், 30-39 வயது-டையோர்-3 லட்சத்து, 5,424 பேர், 40 - 49 வயதுடையோர்-3 லட்சத்து, 34,038 பேர், 50-59 வயதுடையோர்-3 லட்சத்து, 33,216 பேர், 60-69 வயதுடையோர்-2 லட்சத்து, 40,712 பேர், 70-79 வயதுடையோர்-1 லட்சத்து, 29,085 பேர், 80-89 வயது-டையோர்-36,809 பேர், 90-99 வயதில்-4,381 பேர், 110-119 வயதுடையோர்-3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்-ளன. தற்போது கூடுதலாக, 157 ஓட்டுச்சாவடிகள் சேர்க்கப்பட்-டுள்ளன. இதன்படி, 984 இடங்களில், 2,379 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
ஈரோடு கிழக்கில் கூடுதலாக, 22 ஓட்டுச்சாவடி (ஏற்கனவே 237 ஓட்டுச்சாவடி); ஈரோடு மேற்கில் கூடுதலாக, 23 ஓட்டுச்சாவடி (ஏற்கனவே-302); மொடக்குறிச்சியில் கூடுதலாக, 13 (ஏற்க-னவே-277); பெருந்துறையில் கூடுதலாக, 28 (ஏற்கனவே-264); பவானியில் கூடுதலாக, 17 (ஏற்கனவே-289); அந்தியூரில் கூடுத-லாக, 9 (ஏற்கனவே-262); கோபியில் கூடுதலாக, 13 (ஏற்க-னவே-296); பவானிசாகரில் கூடுதலாக, 32 (ஏற்கனவே-295) ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

