/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்
/
16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்
பவானி:அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான, 16 வயது சிறுமி, பிளஸ் ௧ தேர்வு எழுதியுள்ளார். தோழி பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக பெற்றோரிடம் நேற்று முன்தினம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மகளின் தோழிகள் வீடுகளில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. தந்தை சதீஷ்குமார் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார்,
சிறுமியை தேடி வருகின்றனர்.