ADDED : ஆக 01, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சுதந்திர
போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் வரும், 3ல் அரசு விழாவாக
மொடக்குறிச்சி தாலுகா ஓடாநிலையில் நடக்கிறது. அவ்விடத்தில்
இருந்து, 3 கி.மீ., சுற்றளவில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடை,
விழாவுக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும்
பார்கள் அன்றைய தினம் மூடப்படும்.
இதன்படி மூலப்பாளையம்,
அசோகபுரம் டாஸ்மாக் கடைகள், ரயில்வே ஸ்டேஷன் எலைட் ஷாப் என இந்த
மூன்றும் மாலை, 6:00 மணி வரை மூடப்படும். அதேசமயம் வடபழனி,
அரச்சலுார், நாங்கலாம்வலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 13 டாஸ்மாக்
கடைகள் அன்றைய தினம் முழுவதும் மூட, மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
