sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

16 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

/

16 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

16 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

16 ஆயிரம் டன் நெல் கொள்முதல்


ADDED : அக் 16, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில் உள்ள, 38 கொள்முதல் நிலையங்களில், இதுவரை, 16 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த மே., 26 முதல், செப்.,22 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்நீரை கொண்டு இரு பாசனங்களிலும், டி.பி.எஸ்-5, ஏ.எஸ்.டி.,-16 என விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்., மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இருந்து, இரு பாசனங்களிலும், நெல் அறுவடை பணி துவங்கியதால், நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மொத்தம், 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன. அதில் இதுவரை, 16 ஆயிரத்து, 354 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு போகத்தில் அதிகபட்சம், 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 60 சதவீதம் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளதாக, அதன் அதிகாரிகள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us