/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
/
டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ADDED : டிச 08, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், டிச. 8-
தாளவாடி போலீசார் அருள்வாடி பகுதியில் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வேகமாக ஓட்டி சென்றனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
தாளவாடி, தொட்டகாஜனுாரை சேர்ந்த சீனிவாசன், 48; மைசூரு, சாம்ராஜ் நகரை சேர்ந்த முஜீப் அகமது, 44, என்பது தெரிந்தது. இருவரும் பைக்கில் வைத்திருந்த, 220 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.