ADDED : செப் 24, 2025 01:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, :ஈரோடு அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன், 45; கடந்த, 20, ௨௧ தேதிகளில் அடுத்தடுத்து இவர் வளர்க்கும் இரு ஆடுகள் மாயமானது. புகாரின்படி அறச்சலுார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வெள்ளோடு பி.மேட்டுப்பாளையம் ரகு, 35, தரணீஸ், 24, ஆகியோர் வெள்ளாட்டை, காரில் திருடி சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.
