ADDED : மார் 20, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானியை அடுத்த மயிலம்பாடியில், பிரசித்தி பெற்ற கரிய காளி-யம்மன் கோவில் உள்ளது.
ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவிலில், ஒரு தரப்-பினர் எதேச்சதிகாரமாக நடப்பதாக கூறி, ஒரு தரப்பு மக்கள் எதி-ரிப்பு தெரிவித்து வருகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, பல கட்ட போராட்டம் நடத்தி, மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கோவிலில் ஒரு தரப்பினர் வைத்த சிலையை அகற்-றாததை கண்டித்து, கோவில் வகையறாவுக்கு சொந்தமான, சாணார்பாளையம், மைலம்பாடி, கொண்டுரெட்டிபாளையம், புதுப்பாளையம் உட்பட, 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, ஊர் எல்லை பேனர்கள் வைத்துள்ளனர்.
