ADDED : அக் 16, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,000 டன் நெல் வரத்து
ஈரோடு, அக். 16-
மன்னார்குடியில் இருந்து சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு, 2,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்ட பின், பொது வினியோக திட்டத்தில், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.