ADDED : அக் 14, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் இருந்து சரக்கு ரயிலில், 2,௦௦௦ டன் நெல் ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரியில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
விரைவில் தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.