/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு
ADDED : அக் 07, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நடந்தது. மகளிர் உரிமை தொகை, விதவை உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், பட்டா மாறுதல் உட்பட, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் ஏற்கப்பட்டு,
அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இலவச சலவை பெட்டிகள், 10 நபர்களுக்கும், இலவச தையல் இயந்திரங்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் பங்கேற்றனர்.