/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி
/
இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி
ADDED : டிச 24, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 24--
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதல் நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதில், 25 பேர் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தற்போது மையத்தில், முதன்மை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. பயிற்சி கால அட்டவணை, சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வு, இணைய வழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்படும். தற்போதைய முதன்மை
தேர்வுக்கு தகுதியானவர்கள், பயிற்சி பெறலாம்.