ADDED : ஆக 03, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த ஜூலையில் மாநகரில் பல்வேறு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில்
மொபைல் போன் பேசியவாறு வாகனம் ஓட்டியது-84, குடிபோதை வாகன
இயக்கம்-69, ஹெல்மெட் அணியாமல் சென்றது-1,241, டிரைவிங் லைசன்ஸ் இன்றி
வாகனம் இயக்கியது-183, பிற இனங்கள் என மொத்தம் 2,655 வழக்குகளை பதிவு
செய்து அபராத தொகையாக, 9.38 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
குடிபோதையில் வாகனம் இயக்கிய, 41 பேரின் லைசன்சை தற்காலிகமாக ரத்து
செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
