ADDED : நவ 19, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்தது.
இதில், 7,325 ஆசிரியர்கள் பங்கேற்காமல் பணிக்கு வந்தனர். 332 பேர் முன் கூட்டியே அனுமதி பெற்று விடுப்பில் இருந்தனர். 3,147 ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் ஆப்சென்ட் ஆகினர். இதேபோல் ஆசிரியர் அல்லாத அலுவலர், 529 பேர் பணிக்கு வந்தனர். 27 பேர் முன் கூட்டியே விடுப்பு பெற்றிருந்தனர். 85 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

