ADDED : ஏப் 02, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த, 31ல் டாஸ்மாக் கடை, பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மது விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.
இந்நிலையில், அரசின் அறிவிப்பை பொருட்படுத்தாமல், கூடுதல் விலைக்கு விற்றதாக 9 பேர் மீது ஈரோடு மாவட்ட போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 350 மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
