ADDED : மே 25, 2025 01:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 369 பயனாளிகளுக்கு, 5.34 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி, வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
