ADDED : பிப் 04, 2026 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பலர் சட்ட விரோதமாக தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின்படி பெருந்துறை போலீசார், மாவட்ட கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த, 27 வயது முதல் 30 வயது வரையிலான நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லாததால், கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள சிறப்பு முகாமில், நான்கு பேரையும் கொண்டு சென்று அடைத்தனர்.

