/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜே.இ.இ., தேர்வில் 4 அரசுப்பள்ளி மாணவர் தேர்ச்சி
/
ஜே.இ.இ., தேர்வில் 4 அரசுப்பள்ளி மாணவர் தேர்ச்சி
ADDED : பிப் 20, 2026 05:21 AM
ஈரோடு: நாடு முழுவதும் பொறியியல் கல்லுாரிகளில், பொறியியல் படிக்க தேசிய அளவில் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெற, வெற்றி பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டு, போட்டித்தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. சமீ-பத்தில் ஜே.இ.இ., தேர்வு நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த, 110 மாணவ--மாணவியர் தேர்வெழுதினர். இதில் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி மாணவி மதுமிதா, அந்தியூர் ஏ.செம்புளிச்-சாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அனிஷா, புளியம்பட்டி கே.வி.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விஜயராகவன், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யஷ்வந்த் ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொறியியல் ஒதுக்கப்படும். இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தெரிவித்தார்.

