
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த புதுரோடு பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. இதன்படி புதுரோடு டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேர் நாணயத்தை சுண்டி பூவா தலையா சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டறிந்-தனர்.
மடக்கிப்பிடித்து விசாரித்த போது ரகு, 50, சுரேஷ் பாபு, 55, விஜ-யகுமார், 30, ராமலிங்கம், 46, என்பது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 2,470 ரூபாய் மற்றும் மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர். பிறகு நால்வரையும், சொந்த ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.

