ADDED : ஜூலை 05, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:வெள்ளகோவில்
அருகே பொன்பரப்பியை சேர்ந்தவர் பிரதீப் குழந்தைவேல், 33; இவருக்கு
சொந்தமாக ஓலப்பாளையம் அருகே நெடுங்காட்டு தோட்டத்தில், 25 ஏக்கர்
நிலம் உள்ளது. அங்கு, 50 செம்மறி ஆடுகள், 13 மாடுகளை வளர்த்து
வருகின்றார். கடந்த வாரம் நான்கு மாடுகள் திருட்டு போனது. இதுகுறித்து
வெள்ளகோவில் போலீசில் புகார் தெரிவித்தார்.
க்ஷ
இது தொடர்பாக
ஆனைமலை அருகேயுள்ள திவான் சாலைபுதுார் மகாபிரபு, 23, சந்துரு, 21,
ஜெயசூர்யா, 19; வெள்ளகோவில், தென்னகரப்பாளையத்தை சேர்ந்த
சக்திவேல், 42, என நான்கு பேரை கைது செய்தனர். திருடப்பட்ட மாடுகளை
கைப்பற்றி, திருட்டுக்கு பயன்படுத்திய மினி வேன், பைக்கை பறிமுதல்
செய்தனர். நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய
சிறையில்அடைத்தனர்.