/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 4பேர் பலி
/
வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 4பேர் பலி
ADDED : ஆக 29, 2025 01:12 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் நான்கு உயிரிழப்புகளும், 10 பேர் காயமும் அடைந்தனர்.
* அந்தியூர், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ், 25; ஹோண்டா ஷைன் பைக்கில் முத்துார் சாலை கந்தம்பாளையத்தில் நேற்று முன்தினம் சென்றார். எதிரே ஹீரோ ஸ்கூட்டரில் அதிவேகமாக, கவனக்குறைவாக காங்கேயம், பழனிகவுண்டன் வலசை சேர்ந்த கருப்புசாமி, 35, வந்து மோதினார். இதில் விக்னேஷ் பலியானார். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* பாசூர், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பழனி, 65; சோளங்காபாளையம்-சோழசிராமணி சாலையில் நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த மாருதி சூசுகி ரிட்ஸ் கார் மோதியதில் உயிரிழந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 37; ஹீரோ ஹோண்டா ஸ்ளெண்டர் பைக்கில் ஏழு வயது மகனுடன் திங்களூர்-பெருந்துறை சாலையில் தலையம்பாளையம் பிரிவு அருகே சென்றார். பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் யுவராஜ் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில்லாமல் பல்வேறு விபத்துகளில், ௧௦ பேர் காயமடைந்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.