sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து ஈரோடு வியாபாரி உட்பட 4 பேர் பலி

/

கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து ஈரோடு வியாபாரி உட்பட 4 பேர் பலி

கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து ஈரோடு வியாபாரி உட்பட 4 பேர் பலி

கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து ஈரோடு வியாபாரி உட்பட 4 பேர் பலி


ADDED : மார் 20, 2024 02:23 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சி ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியாயினர்.

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் பிரஷர் குக்கர் தயாரிக்கும் கம்பெனி ஊழியர்கள், டீலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது. அவர்கள் வேன், கார் மூலம் இரண்டு நாட்களுக்கு முன் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.

அருகே மாங்குளம் ஊராட்சியில் முக்கிய சுற்றுலா பகுதியான ஆனக்குளத்திற்கு நேற்று சென்றுவிட்டு விடுதியை நோக்கி திரும்புகையில் பேய்மரம் பகுதி வளைவில் திரும்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் குழந்தைகள் உட்பட 14 பேர் இருந்தனர். விபத்து நடந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வேறு வாகனத்தில் வந்த பயணிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் வேனில் சிக்கியவர்களை மீட்டு, அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதில் தேனியை சேர்ந்த குணசேகரன், 70, அபிநாஸ்மூர்த்தி, 30, அவரது 1 வயது மகன் தன்விக், ஈரோட்டைச் சேர்ந்த பாத்திர கடை உரிமையாளர் சேது, 34, ஆகியோர் வழியிலேயே இறந்தனர்.

தேனியைச் சேர்ந்த வேன் டிரைவர் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அடிமாலி, தொடுபுழா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us