/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா
/
ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 22, 2025 01:17 AM
ஈரோடு,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 49வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தாளாளர் கே.கே.பாலுசாமி தொடங்கி வைத்தார். முதல்வர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா
ர்.சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுனருமான சதாசிவம் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில், 1,064 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். இளநிலை மாணவர், 22 பேர், முதுநிலை மாணவர் ஒன்பது பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.
விழா ஒருங்கிணைப்பு பணிகளை கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் வெங்கடாசலம், வழிநடத்தினர். நிகழ்வில் டிரஸ்ட் துணைதலைவர் மாணிக்கம் மற்றும் உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.