ADDED : செப் 03, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே நசியனுார் பஸ் நிறுத்த பகுதியில் சிலர் சூதாடுவதாக தகவல் கிடைத்தது. சித்தோடு போலீசார் சென்றபோது சூதாடிய ஐந்து பேரை வளைத்தனர்.
விசாரணையில் சித்தோடு, ராயபாளையம் மணிகண்டன், 35; நசியனுார் கார்த்திகேயன், 52, தர்மராஜன், 24, நசியனுார் முல்லம்பட்டி பாலகுமார், 24; கரூர் சமத்துவபுரம் வெங்கடேஷ், 24, என்பதும் தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 1,900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.