/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறு முத்திரையிடாத 54 எடை கற்கள் பறிமுதல்
/
மறு முத்திரையிடாத 54 எடை கற்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், கவுந்தப்பாடி, புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் ஆய்வு செய்தனர்.
இதில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடையளவு, மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிட்டு பயன்படுத்தப்படுகிறதா என கூட்டாய்வு செய்தனர். இதில் மறு முத்திரையிடாத, 54 எடை கற்களை பறிமுதல் செய்தனர்.